Wednesday, April 7, 2010

குறுஞ்செய்திகள்

வெயில் வாட்டி எடுக்கிறது. வந்திருந்த சென்னை நண்பர்கள் சென்னை வெயிலே பரவாயில்லை என்றார்கள். (நான் பார்த்த வரையில் 36.6டிகரி வரை வந்தது)

சின்னார் சாலையில் யானைகள் அட்டகாசம் பண்ணுகிறது. போன வாரம் கலெக்டர் தாசில்தார் காரை மறித்து மறியல் பண்ணியது. (சாயந்திரம் போங்கள் ஒரு பத்து யானைகளையாவது நிச்சயம் பார்க்கலாம்)

கடைகளுக்கு பெயர் பலகை வைக்கிறார்களே இல்லையோ..வேலைக்கு ஆட்கள் தேவைனு போர்டு வைக்கிறார்கள். கிட்டதட்ட நம்ம ஊரில் 80% கடைகளில் போர்டு தொங்குகிறது. பிரபலமான கடை முதற்கொண்டு இன்னும் தொடங்காத கடை வரை இந்த பிரச்சனை இருக்கிறது. எல்லாம் திருப்பூர் சென்னை பெங்களுர் செய்யும் ஜாலம்.

ஒரளவு தண்ணீர் பிரச்சனை வந்து விட்டது. வாசல் தெளிப்பது முதல் பைக் கழுவுவது வரை தண்ணீரை இறைத்து பயன்படுத்தி பழக்கப்பட்ட நம்ம ஊர் மக்கள் மே மாதம் கொஞ்சம் கஷ்டப்படத் தான் போகிறார்கள்.

சில லட்சம் ரூபாய்களில் அமராவதி அணையின் பூங்கா சற்றே மேம்படுத்தப்படுகிறது. உடுமலையில் பயன்படுத்த பூங்கா இல்லாத குறையை 21கிமீ தள்ளியிருக்கும் இந்த பூங்காவாவது நீக்கட்டும்

மின்மயானம் செயல்பட ஆரம்பித்து விட்டது. இனி வாழ்வின் தொடக்கமும் முடிவும் நம்ம ஊரிலேயே சாத்தியம். இது வரை பிறக்க ஒரு ஊர் இறக்க ஒரு ஊர் என்ற கொடுமை தீர்ந்து விட்டது.(இந்துக்களுக்கு மட்டும்)


யோகா தியானம் ஆகியவற்றில் ஆர்வம் நிறைய பேர்களுக்கு நிறைய வந்திருக்கிறது. முக்கியமான தியேட்டர் ரோட்டில் உள்ள முக்கிய டாக்டரே சர்க்கரை நோய் குறைய யோகாவில் சேர்ந்திருக்கிறார்.

நெடுஞ்சாலை துறை அமைச்சர் திண்டுக்கல் - கோவை சாலை 4 வழிப்பாதை ஆக்கப்படும் என்று சில தினங்களுக்கு முன் அறிவித்திருக்கிறார்.

ரயில்வே பால வேலையும் அகல பாதை வேலையும் நடைபெறாமல் அந்தப் பகுதி மக்களை ரொம்பபே இம்சித்து கொண்டுயிருக்கின்றன.

நம்ம ஊரில் பள்ளி கல்லூரி சேர்க்கை காலம் இது

LKGல் பிரபலம் சீனிவாசா
11ஆம் வகுப்புக்கும் சீனிவாசா
கலைக் கல்லூரி என்றால் பொள்ளாச்சியில் அல்லது வெளியூரில் படிக்கவே மாணவர்கள் விரும்புகிறார்கள்.
மாணவிகள் அந்த பெண்கள் மட்டுமே படிக்கும் கல்லூரியை விரும்புவதில்லை. ஆனால் பெற்றோர்கள் விரும்புவதால் நிறைய பேர் அங்கேயே படிக்கிறார்கள்

பொறியியல் கல்லூரி என்றால் குறிப்பிட்டு சொல்ல முடியாதபடி அவரவர் விருப்பங்கள் தேர்ந்தெடுக்கும் பாடங்கள் என மாறுபடுகிறது