Thursday, November 19, 2009
செய்திகள் சில
Wednesday, November 4, 2009
slice of life @ udumalpet - 4
Monday, October 19, 2009
உடுமலைப்பேட்டை
நாணயம் விகடனின் வந்த கட்டுரை (நன்றி நாணயம் விகடன்)
''எங்க ஊரை 'ஏழைகளின் ஊட்டி'னு சொல்லுவாங்க... ஆளையே உசர தூக்கிட்டுப் போறமாதிரி காத்து, ஊரைச் சுத்தி மலைக, சில்லுனு எப்பவும் மோடம் போட்ட மாதிரி இருக்கற க்ளைமேட் இதுகதானுங்க அப்படிச் சொல்றதுக்குக் காரணம். இன்னிக்கு கம்ப்யூட்டர்ல கணக்குப் போட்டு பங்கு மார்க்கெட்ல பணத்தை இறக்குறாங்க. ஆனா 'ஆன்லைன்' இல்லாத காலத்துலயே போன்ல பேசியே பிஸினஸை டெவலப் செஞ்ச ஊருங்க எங்க ஊரு''னு உடுமலைப்பேட்டையிலருந்து வர்றவங்க சொல்லி அடிக்கடி கேட்டிருக்கேன்...'' அதெல்லாம் உதாறா, உண்மையானு தெரிஞ்சிக்கிடலாம்னு அங்கே விட்டேன் சவாரி...
உடுமலையைச் சுத்தியிருக்கற 64 கிராம மக்களை நம்பித்தான் இந்த ஊர் தொழில்கள் இருக்கு. அந்த 64 கிராம மக்களுக்கும் முக்கிய வருமானம் விவசாயம்தான்! குறிப்பா உடுமலை பகுதியில தென்னையும், வாழையும் அதிகம். முக்கியமான தொழில்னு பாத்தா... பிராய்லர் கோழி வளர்ப்பு, நூல் மில், கொப்பரை இவைகதானு டிபன் சாப்பிட்ட இடத்துலயே விசாரிச்சுத் தெரிஞ்சுக்கிட்டேன்.
சரி, நூல் மில்ல இருந்து ஆரம்பிக்கலாமுன்னு முடிவு பண்ணி, மில் யூனிட் வச்சிருக்கற காளிதாஸைப் போய்ப் பாத்தேன். என்னைப் பாத்ததுல அவருக்கு அம்புட்டு சந்தோசம். இந்த தொழிலைப் பத்திக் கேட்டதும் சும்மா திருமூர்த்தி அருவி கணக்கா கொட்ட ஆரம்பிச்சுட்டாரு.
''இங்க பெரிய ஸ்பின்னிங் மில்லுக இருந்தாலும், 'ஒப்பன் எண்ட் யூனிட்'னு சொல்ற எங்கள மாதிரி சின்ன யூனிட்டுகதானுங்க அதிகம். பெரிய மில்கள்ல வேஸ்டாகுற கழிவுப் பஞ்சுகளை வாங்கி அதுல நூலை தயாரிக்குறதுதான் எங்க தொழில். இப்படி கழிவுப் பஞ்சுல தயாராகுற நூலை வச்சுத்தான் போர்வை, பெட்ஷீட், காடா துணிகளைத் தயாரிக்குறாங்க. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்கள்ல மட்டும் 'ஓப்பன் எண்ட் யூனிட்'க 300-க்கும் மேல இருக்கு. அதுல அதிகமா இருக்கறது வெள்ளக்கோவிலிலயும், உடுமலையிலயுந்தான்.
இந்தத் தொழிலை நம்பி நேரடியாவும், மறைமுகமாவும் ரெண்டு லட்சம் குடும்பங்க பொழைச்சுக்கிட்டிருக்கு. நல்லா நடந்துக்கிட்டிருந்த இந்தத் தொழிலு, இப்ப கொஞ்ச நாளா தேக்கமா இருக்கு. பஞ்சு விலை கூடிப்போச்சு. இதைத் தாக்குப் பிடிக்க முடியாம பல யூனிட்களை மூடிட்டாங்க. அதனால அரசு உடனடியா எங்க தொழிலுக்குவாட், செஸ் வரியை ரத்து செய்யறதோட, கழிவுப் பஞ்சை ஏற்றுமதி செய்யறதையும் தடை செய்யணும்'' என்று கோரிக்கை வைத்தார்.
காளிதாஸூக்கு ஒரு வணக்கத்தைப் போட்டுட்டு நடையைக் கட்டுனேன். வழியில இருந்த ஒரு கொப்பரை களத்தைப் பாத்ததும் உள்ளே நுழைஞ்சிட்டேன். அங்க ஒரு பக்கம் தேங்காயை உரிக்குறதும், காய வக்கிறதுமா பிஸியா இருந்தாங்க. கொப்பரை களத்தோட பொறுப்பாளர் சீனிவாசன்கிட்ட பேசினேன்.
''இங்க தென்னை மரங்க ஜாஸ்தி. சில பேரு காயா விப்பாங்க. சிலரு கொப்பரையாக்கி விப்பாங்க. அப்படி கொப்பரையா விக்க நினைக்குற விவசாயிங்க எங்கள மாதிரி களம் வச்சிருக்கவங்ககிட்ட சொல்லிடுவாங்க. நாங்களே ஆளுகள வச்சி கொப்பரையாக்கி கொடுத் திடுவோம். அதை விவசாயிக விரும்புன இடத்துல வித்துக்குவாங்க. ஒரு சிலரு எங்களையே வித்து தரச் சொல்லுவாங்க. அவங்களுக்கு நாங்க வித்துக் கொடுத்துடுவோம். இதுல ஒளிவு, மறைவுக்கு வேலையே இல்லை. ஈரோடு மார்க்கெட் விலை எஸ்.எம்.எஸ்-ல வந்துடும். அந்த விலைக்கு உள்ளூர் வியாபாரிககிட்ட வித்துக் கொடுப்போம். எங்களுக்கு தேங்காயை ஒடைச்சு பருப்பெடுக்குறப்ப கிடைக்குற தொட்டிதான் (கொட்டாங்குச்சி) லாபம்.
இந்தத் தொட்டிக கார்பன் தயாரிக்குறதுக்குப் பயன்படுது. நாங்க தொட்டிகளை காங்கேயத்துக்கு அனுப்பிடுவோம். அங்கதான் இதை கார்பனா மாத்துற யூனிட்க இருக்கு. சில நேரத்துல கலைப்பொருட்களைச் செய்யறவங்களும் வந்து தொட்டிகளை வாங்கிட்டுப் போவாங்க. இன்னிக்கு நிலமைக்கு தொட்டி ஒரு டன் 3,300 ரூபாய்க்கு விக்குது. உடுமலையில எங்களை மாதிரி 40-க்கும் அதிகமான களங்க இருக்கு. ஐம்பது நாள் கழிச்சு எல்லாரும் சேர்த்து மொத்தம் 500 டன்னுக்கு மேல தொட்டிகளை அனுப்புறோம்'' என்றார்.
அடுத்ததா பிராய்லர் வளர்ப்பு பற்றி தெரிஞ்சுக்கு றதுக்காக 'வெங்கடேஸ்வரா ஹேட்சர் ஸ்கம்பெனி'க்காக முட்டைகளைத் தயாரிச்சுக் கொடுத்துக் கிட்டிருக்கற மகாலிங்கத்தைப் போய்ப் பாத்தேன்.
''இங்க பத்து விவசாயிக்கு ஒரு விவசாயி பிராய்லர் வளக்குற பண்ணை வச்சிருப்பாங்க. இதுக்கு ஆள் அதிகம் தேவைப்படாது. விவசாயத்தோட ஒட்டுன தொழில். கோழிகளோட எச்சத்தை நிலத்துக்கு உரமா போட்டுக்கலாம். அதனாலதான் விவசாயிக அதிகமா ஒப்பந்த முறையில பிராய்லர் வளர்க்குறதுல ஆர்வம் காட்டுறாங்க. கம்பெனிக் காரங்க குஞ்சுகளைக் கொடுத்துட்டு, 60 நாளைக்கு ஒரு தடவை எடுத்துக்குவாங்க. தீவனத்திலிருந்து எல்லாத்தையும் அவங்களே கொடுத்துட்டு, கிலோவுக்கு 3 ரூபா கொடுக்குறதால விவசாயிகளும் ஆர்வமா செய்யறாங்க.
நான் முட்டை உற்பத்தி செஞ்சு கொடுக்குறேன். இதுக்கு இன்வெஸ்ட்மென்ட் அதிகமாகும். அதோட கவனிப்பும் அதிகம் தேவைப்படுறதால ஒரு சிலர் மட்டுந்தான் முட்டை உற்பத்தி செய்யற பண்ணை வச்சிருக்காங்க. பிராய்லர் கோழி பண்ணைக மூலம் மட்டும் உடுமலையில வருசத்துக்கு சுமார் 50 கோடிக்கு மேல டேர்ன் ஓவர் ஆகுது. இப்ப இடையில கொஞ்ச நாளா பிராய்லர் ஃபீல்டு கொஞ்சம் டல்லா இருந்துச்சு. இப்ப மறுபடியும் நல்லாயிருக்கு'' என்றார்.
அடுத்ததா உடுமலை வியாபாரிகள் சங்கத் தலைவர் பால நாகமணியைப் பாத்து ஊரோட வியாபாரத்தைப் பத்திக் கேட்டேன்...
''வியாபாரம் முன்ன விட குறைஞ்சு போச்சு. இப்ப நகைக்கடையிலயும், துணிக்கடையிலயும்தான் ஓரளவுக்கு வியாபாரம் நல்லா இருக்கு. நாங்க மூணு தலைமுறையா பலசரக்கு கடை வச்சிருக்கோம். எங்க தாத்தா காலத்துல 12 தராசு எப்பவும் பிஸியாவே இருக்கும். இப்ப ரெண்டு தராசுக்கே வேலையைக் காணோம். விலைவாசி கூடுனதால, வழக்கமா வாங்குற அளவை விட குறைச்சலாத்தான் வாங்குறாங்க. மக்களும் சிக்கனமா செலவழிக்க ஆரம்பிச்சுட்டாங்க'' என்றார்.
இந்த ஊர் மக்கள் எப்படி சேமிக்குறாங்கனு 'ஷேர்கான்' நிறுவனத் தோட ஃப்ரான்ச்சைஸ் பொறுப்பாளர் சம்பத்கிட்ட கேட்டேன்.
''மக்கள்கிட்ட ஷேரைப் பத்துன விழிப்புணர்வு அதிகமாவே இருக்கு. ஆன்லைன் இல்லாத காலத்துல ஆஃப்லைன்லயே அதிக வியாபாரம் பண்ணது உடுமலைதான். ஷேர்ல மட்டுமில்லாம ரியல் எஸ்டேட், தங்கம், வங்கினு நாலு வகையிலயும் சமமா முதலீடு பண்றாங்க. இங்க மொத்தம் எட்டு புரோக்கிங் ஆபீஸ் இருக்கு. எல்லா ஆபீஸிலயும் சேத்து ஒரு நாளைக்கு 10 கோடி ரூபாய்க்கு பிஸினஸ் நடக்குது'' என்றார்.
ல் எஸ்டேட் தொழிலும் இந்த ஊர்ல சக்கை போடு போட்டுக்கிட் டிருக்கு. இந்தப் பகுதியில வீசுற காத்துலயிருந்து மின்சாரம் தயாரிக் குறதுக்காக ஏகப்பட்ட விண்ட் மில்கள் வந்துக்கிட்டிருக்கு. நிலங்களோட விலை கூடுறதுக்கு அதுவும் ஒரு காரணம். ஊருக்கு தெக்க இருக்க திருமூர்த்தி மலைக்குப் போற சாலையும், கிழக்கே பழநி ரோடும் நல்லா டெவலப் ஆகிட்டு இருக்கு. 'பைபாஸ் ரோடு வந்தா... ஊரோடு வளர்ச்சி இன்னும் நல்லாயிருக்குமுன்'னு சொல்றாங்க.
கடைசியா, மனவளக் கலை மன்றம் வச்சிருக்கற பொன்னுசாமிகிட்ட ஊர் நிலவரத்தைக் கேட்டேன்.
''இந்த ஊரைச் சுத்தியும் சுற்றுலாதலங்கள் இருக்கு. திருமூர்த்தி அணை, அமராவதி அணை, ஆழியாறு, பழநினு எல்லாமே முப்பது கிலோமீட்டர் சுற்றளவுக்குள்ளயே இருக்கு. அதைவிட இந்த ஊர்ல கல்வி ஸ்தாபனங்கள் தரமா இருக்கு. பல ஊர்களிலிருந்தும் தங்களோட பிள்ளைகளை இந்த ஊருலயிருக்கற பள்ளியில சேத்துப் படிக்க வைக்குறாங்க. புகழ் பெற்ற சைனிக் ஸ்கூலும் இங்கதான் இருக்கு. இந்த ஊர்ல ஏகப்பட்ட வேலைக இருக்கு. அதைச் செய்யறதுக்குத்தான் ஆளைக் காணோம். தினமும் இங்கிருந்து எட்டு பஸ்ல திருப்பூருக்கு வேலைக்கு ஆளுகளை ஏத்திக்கிட்டுப் போறாங்க. அதுனால உள்ளூர்ல எந்தத் தொழிலுக்கும் ஆளுக கிடைக்கிறதில்லை. திருமுர்த்தி அணை, அமராவதி அணைகளைச் சுற்றுலாதலமா அறிவிச்சு, ஊருக்கு ஒரு பைபாஸ் போட்டுட்டா... இன்னும் பல மடங்கு முன்னேறிடும் எங்க ஊரு'' என்றார்.
இந்த ஊரைப் பொறுத்தவரைக்கும் மக்கள் நல்ல உழைப்பாளிகளாகவும், சம்பாதிக்கத் தெரிந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அதே நேரம் சமீபகாலமாகச் சம்பாதிக்கும் பணத்தைச் சேமிப்பதை விட, அனுபவிப்பதில்தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த ஊர்களில் அதிகரித்து வரும் கார்களின் எண்ணிக்கையே இதை உறுதி செய்கிறது.
Wednesday, October 7, 2009
slice of life @ udumalpet - 3
Monday, September 28, 2009
slice of life @ udumalpet - 2
அடுத்த நாள் மதியம் சாப்ட்வேர்காரருடன் சாப்பிட்டு கொண்டுயிருந்தவர்(புரேக்கர்) நமது கடையில் பெயரை மட்டும் வைத்துக் கொண்டு எப்படியே தேடி கண்டுப்பிடுத்து "என்ன தம்பி இப்படி என் வியாபாரததை கெடுத்தீட்டிங்க. வரும் திங்கட்கிழமை கிரயம் வைச்சுக்கலாம்னு சொன்னவர் இப்ப தோட்டம் வேண்டாம் வீடு பார்க்கலாம்ங்கிறார். XX லட்சம் ரூபாய் வியாபாரத்தைக் கெடுத்தீட்டிங்ளே...நல்லா இருங்க தம்பி என்று சாபம் விடும் ஸடைலில் சொல்லிவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் கிளம்பிவிட்டார். வருத்தத்துடன் இனிமேல் அடுத்தவர் விசயத்தில் மூக்கை நுழைக்ககூடாது என்றும் நமக்கு சம்பந்தம் இல்லாதவைகளைப் பற்றி கருத்து சொல்லக்கூடாது என்று 12வது முறையாக முடிவெடுத்துள்ளேன். பார்க்கலாம் :)
Wednesday, August 26, 2009
ஸீன் காட்டி சீட்டிங்!
''பள்ளிக்கூடத்துல படிக்கும்போதே கோடி கோடியா சம்பாதிக்கணும்னு அந்தாளுக்கு வெறி. அந்த வெறி முப்பத்தெட்டு வயசுலேயும் தீப்பொறியா இருந்திருக்கு. திட்டமிட்டு வேலை செஞ்சதால, குறுகிய நாட்கள்ல இருநூற்றைம்பது கோடி ரூபாய் சம்பாதிக்கிற அளவுக்கு உயர்ந்திருக்காரு...'' என்று 'பில்டப்' கொடுத்த போலீஸார், கடைசியில்... ''அந்தாளு இப்போ எங்க கஸ்டடியில!'' என்று சொல்லவும், ''அடடா... விவகாரம் ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும் போலிருக்கே!'' என்று இந்த கேஸை விசாரித்து வரும் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் டீம் முன் ஆஜரானோம்.
''சின்ன மீனுன்னு நினைச்சு விசாரணையில இறங்கினோம். கடைசியில அது திமிங்கிலமா இருக்கு...'' என்று ஆச்சர்யம் விலகாமல் கேஸ் பற்றி விரிவாகப் பேசி னார்கள்.
''உடுமலை சுத்துவட்டாரத்துல நலிவடைஞ்சு போன நூல், பேப்பர் மில்லுங்க ஏராளமா இருக்கு. கோடீஸ் வரனா ஆகியே தீரணும்னு கங்கணம் கட்டித் திரிஞ்சுக்கிட்டு இருந்த உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சீனிவாசன், நலிவடைஞ்ச அந்த மில்களை தானே நடத்துறதாகவும், அதுக்கு ஒரு அமௌண்ட் கொடுத்திடு றேன்னும் சொல்லியிருக்கான். இதை நம்பி, பதினைஞ்சுக்கும் மேற் பட்ட மில்காரங்க, அவன் பொறுப்புல மில்களை ஒப்படைச்சுட்டாங்க.
இந்த மில்லில் உற்பத்தி செஞ்ச பத்து கோடி ரூபாய் மதிப்புள்ள நூலை, இல்லாத ஒரு கம்பெனிக்கு அனுப்பியிருக்குறதா போலி டாக்குமென்ட் தயாரிச்சுருக்கான். அந்த நூலை கம்பெனி பெற்றுக் கொண்டதாகவும், பத்து கோடி ரூபாய்க்கான செக்கையும், உறுதி மொழிப் பத்திரத்தையும் அவங்க அனுப்பியிருக்கிற தாகவும் டாக்குமென்ட் ரெடி பண்ணியிருக்கான். 'பத்து கோடி ரூபாய் என் கம்பெனிக்கு வர வேண்டி இருக்குது. இந்த டாக்குமென்ட்டை வச்சுக்கிட்டு, அந்த கம்பெனி கிட்ட இருந்து பணத்தை வசூல் பண்ணிக்கங்க. எனக்கு அமௌண்டைக் கொடுத்திடுங்க'ன்னு வங்கி அதிகாரிகள்கிட்டச் சொல்லி கோடிக்கணக்கான பணம் வாங்கியிருக்கான். இதைப் போல ஏராளமான போலி கம்பெனிகளை காட்டி இருநூற்றைம்பது கோடி ரூபாய் வரை பணம் சம்பாதிச்சுருக்கான். இந்த தகவல் ஒரிஜினல் மில் நிர்வாகிகளுக்குத் தெரிஞ்சதும், அவங்க பதறிக்கிட்டு எங்ககிட்ட வந்தாங்க.
சீனிவாசன் வாங்கியிருக்குற சொத்து, பேங்குல இருந்து எத்தனை கோடிக்குப் பணப்பரிவர்த்தனை நடந்திருக்குங்குற தகவலை எல்லாம் ஒரு மாசமா சேகரிச்சோம். இந்தத் தகவல் எங்களையே கிறுகிறுக்க வைத்தது. சீனிவாசனுக்கு குதிரைன்னா ரொம்பப் புடிக்கும். அதனால வட இந்தியாவுல இருந்து இருநூறு குதிரை வாங்கியிருக்கான். ஒரு குதிரையோட ரேட் குறைஞ்சபட்சம் ஏழு லட்சம் ரூபாய். வீட்டுல இருந்து அடுத்த மாநிலங்களுக்கு ஹெலிகாப்டர்ல போறதுக்கு ஆசைப்பட்ட சீனிவாசன், சில ஹெலிகாப்டர் கம்பெனிகள்ல கொட்டேஷன் வாங்கியிருக்கான். அது தொடர்பான டாக்குமென்ட்டை கைப்பத்தியிருக்கோம். 'அயன்,' 'படிக்காதவன்' படங்களோட கோவை மாவட்ட விநியோகஸ்தராகவும் இருந்தி ருக்கான். சமீபத்துல தாய்லாந்து போயிட்டு ஒரே நாள்ல நாற்பது லட்சம் ரூபாய் செலவு செஞ்சுருக்கான்.
சீனிவாசன்கிட்ட கோடிக்கணக்குல ஏமாந்து போயிருக்குறது மத்திய அரசு கன்ட்ரோல்ல இருக்குற ஒரு பேங்க்தான். அது போல, இவ்ளோ பெரிய நஷ்டத்தை அந்த கம்பெனி எதிர்பார்க்கல. அந்த கம்பெனியில இருந்து முக்கிய அதிகாரி ஒருத்தரு ராஜினாமா செஞ்சுருக்காரு. இன்னும் பல அதிகாரிகளுக்குத் தொடர்பு இருக் கும்னு நினைக்கிறோம்...'' என்று சொன்னார்கள். போலீஸார் தேடுவதை அறிந்ததும் கோர்ட்டில் சரணடைந்து விட்டார் சீனிவாசன். அவர் வளர்த்து வந்த குதிரைகளும் அவருடைய ஆட்களால் கேரளாவுக்கு 'ஷிப்ட்' செய்யப் பட்டு விட்டது. சீனிவாசனுக்கு மோசடியில் துணையாக இருந்த வெங்கடாசலபதி, செல்வக்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
'இத்தனை கோல்மால்களையும் அரசியல் தொடர்பு இல்லாமல் சீனிவாசன் செய்திருக்க முடியுமா?' என்ற சந்தேகமும் போலீஸார் மத்தியில் ஏற்பட்டிருக்க... அது தொடர்பாகவும் விசாரித்து வருகிறார்கள்.
விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜர்படுத்த வந்த போது சீனிவாசனிடம் பேசினோம். ''என்னைப் பத்தி என்ன வேணும்னாலும் எழுதிக்கங்க. இந்த வழக்குல இருந்து நான் நிச்சயம் வெளியில வருவேன். வந்த பிறகு நடந்த உண்மைகளை எல்லாம் சொல்வேன்...'' என்று அசராமல் சொன்னார்.
வாழ்க்கையில்... தான் கொண்ட 'கோடி' லட்சியத்தை அடைந்துவிட்ட சீனிவாசன், சென்ற பாதையில் மட்டும் தவறி விட்டார்!
Saturday, August 22, 2009
நம்ம ஊரு நல்ல ஊரு
Thursday, August 6, 2009
வளர்ச்சியும் வீழ்ச்சியும்
வளர்ச்சியடைந்தவைகள்
ஜோஸ் Jewellery
Thursday, July 30, 2009
நடந்ததும் நடக்கப்போவதும்
Wednesday, July 22, 2009
slice of life @ udumalpet
சமீபத்தில் உடுமலைப்பேட்டையின் மேற்குப்பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒருவரை சந்தித்தேன். நல்ல படிப்பு நல்ல வசதி நல்ல நற்பண்புகள் ஆகியவற்றை கொண்டுள்ளவர். சுமாராக 33 வயது இருக்கும். பேச்சுவாக்கில் அவரது தினசரி நடவடிக்கைகள் பற்றி பேசினோம்.
காலை 7 மணி: தூக்கம் கலைதல்
8 மணி: குளித்து விட்டு காலை உணவு
9 மணி: UKG படிக்கும் மகளுக்கு டாட்டா சொல்லி ஸ்கூல் வேனில் ஏற்றுதல் (நீங்கள் நினைப்பதைப் போல இதெல்லாம் ஒரு வேலையானு கேட்டேன். உங்களுக்கு திருமணமாகி நீங்களும் பள்ளிக்கு அனுப்பும் போது தெரியும் என்று கூறி என் வாய்யை அடைத்துவிட்டார்.)
10 மணி: தினசரிகளை புரட்டி பார்ப்பது
11மணி: ஊருக்குள் இருக்கும் டீக்கடைக்கு சென்று ஒரு திருட்டு தம் மற்றும் டீ
1 மணி: மதியம் சாப்பாடு
2 மணி: குட்டி தூக்கம்
4 மணி: அருகில் இருக்கும் அவரது தோப்புக்கு சென்று மேற்பார்வை
5.30 மணி : வீடு திரும்புதல்
அப்பறம் பள்ளியில் இருந்து திரும்பிய மகளோடு விளையாட்டு, படிப்பு பின்பு கொஞ்சம் டீவி இரவு பத்து மணிக்கு தூக்கம்.... வாரம் ஒரு தடவை டவுனுக்கு வந்து ஒரு சினிமா. அவ்வளவுதான்.
இதற்கும் கோவை PSGல் MBA படித்தவர். சுமாராக மாதம் 2 லட்சம் வருமானம் (செலவு
Thursday, July 16, 2009
கொஞ்சம் காத குடுங்க...
நாமலும் அது வந்தா வித்தியாசம் வேண்டாமா என்று சொல்லியிருக்கிறார். (அதாவது 100ரூபாய் பிக்பாக்கெட் அடிப்பவனுக்கும் கோடி கோடியாய் அடிப்பவனுக்கு வித்தியாசம் வேண்டுமே அதனால் தான் காரை மாற்றிவிட்டார் போல)