ரூம் போட்டு உட்காந்து யோசிச்சு பார்த்தாலும் தெரியல....ஏதுக்கு தாஜ் தியேட்டர்க்கு வடக்கே சிக்னல் வைச்சிருக்காங்கனு!
250 கோடி ஏமாற்றிய உடுமலை வாலிபர்கள் கைது - தினமலரில் செவ்வாய்கிழமையன்று வந்த செய்தி. இதைப் பற்றி விபரங்கள் வந்தவுடன் தனியாக ஒரு பதிவு போடுகிறேன். (உடுமலைப்பேட்டைல இருந்தா பெரிசா சொத்து சேக்கமுடியாதுனு யாருப்பா சொன்னது.... நன்றாக திட்டமிட்டு உழைத்தால் கண்டிப்பாக முடியும். இவர்களைப் போல...
* இவர்கள் மோசடி பண்ணிய பணத்தில் சுமார் 60 உயர்ரக குதிரைகள் வாங்கினார்கள் (சுமார் மதிப்பு 2 கோடி)
* 15 கார்கள் வாங்கியுள்ளார்கள். (அதுவும் கடனுக்குதான்)
* Helicopter வாங்குவதற்கு பேரம் நடந்துள்ளது
* ஏதோ ஒரு நலிந்த வங்கியையும் வாங்குவதற்கு முயற்சி செய்துள்ளனர் (பார்கக செய்தி)
* இதில் புகைப்படத்தில் முன்றாவதாக உள்ள செல்வக்குமார் கல்லூரியில் எனக்கு இரண்டு வருடம் Junior.
* இரண்டு வருடங்களாக இவர்களுடைய வளர்ச்சியை உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த தொழிற்துறையினர் ஒருவித ஆச்சரியத்துடனே பார்த்தனர்.
இனி உடுமலைப்பேட்டையில் ஒவ்வொரு வீதியும் வெப் கேரமா மூலம் கண்காணிக்கப்படுமாம். நகராட்சி தலைவர் பேட்டியில் கூறியுள்ளார்.
சில நாட்களாக நகரில் உள்ள அனைத்து கடைகளும் குறிப்பாக உணவகம் மற்றும் தேநீர் விடுதிகளை கண்டிப்பாக பத்து மணிக்கு முன்பாக மூடவேண்டும் என காவல் துறையினர் உத்திரவு போட்டுயுள்ளனர்.