கொஞ்ச நாளுக்கு முன்னாடி கல்லூரியை விட்டு வந்த பசங்க ஒரு இருபது பேரிடம் இப்போது பிரபலமாக இருப்பது 'ஒளிஞ்சு விளையாட்டு'. நாம் சின்ன வயதில் விளையாடிய அதே விளையாட்டு தான். ஆனால் இப்போது நாடு கொஞ்சம் முன்னேறியிருப்பதால் அதே விளையாட்டு பைக்கில் விளையாடுகிறார்கள். ஆமாம் பைக்கில் தான். ஆவுட் ஆனவன் கால் மணி நேரத்துக்கு முன்னாடி கிளம்பி போவான். பின்னர் ஆறு அல்லது ஏழு வண்டிகளில் அந்த வண்டியைத் தேடி கிளம்புவார்கள். அவனை கண்டுபிடிக்கனும் இதுதான் விளையாட்டு. விதிகள். ஆறு வண்டிகளும் பல ஏரியாகளில் சுற்றும். ஆறு பேரும் conference இருப்பார்கள். கிட்டதட்ட 3 மணி நேரம் வண்டி நிக்காமல் சுற்ற வேண்டும். கிட்டதட்ட 3 மணி நேர விளையாட்டுக்கு பெட்ரோல் மற்றும் போன் பில் மட்டும் 3000 ரூபாய் ஆகிறதாம். ஆனால் ரொம்ப interesting ஆக இருக்கிறதாம். ஒரு நாள் நானும் கலந்துகிட்டு நம்ம காசையும் புகையாக்கனும்....
இது கிசுகிசு
நகரின் மிகப்பெரிய தொழில்அதிபர். அவரின் மனைவி நிர்வகிக்கும் பஞ்சு மில்லில் ஒரு ஆந்திரா வியாபாரியிடம் சுமார் 4 லட்சத்துக்கு பஞ்சு வாங்கியிருக்கிறார்கள். பஞ்சு வந்ததும் ஒரு பண்டலைப் பிரித்து பார்த்து நல்லாயிருக்கிறது என்று எண்ணி செக் போட்டு அவனுக்கு அனுப்பிவிட்டார்கள். சில நாட்கள் கழித்து மொத்ததையும் பிரித்துப் பார்த்தால் அத்தனையும் வேஸ்ட். மட்டரகம். உடனே பேக் பண்ணி அவனுக்கே திருப்பி அனுப்பி விட்டு செக்குக்கு stop payment கொடுத்து விட்டு அதை மறந்தே விட்டார்கள். அந்த ஆந்திரா காரன் செக்கை வங்கியில் செலுத்தி திருப்பி வந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தான். இவாகளுக்கு சம்மன் வந்ததது. ஆனால் இவங்க மில்லில் யாருக்கும் பணம் பாக்கி வைத்திருப்பதில்லை. செக்கும் பவுண்ஸ் ஆனதில்லை. அதனால் சம்மனை கீழ்மட்ட கிளர்க்கள் கண்டுக்காமல் விட்டு விட்டனர். கடைசியில் அந்த ஆந்திராகாரன் arrest warrant வாங்கிக் கொண்டு நம்வூர் காவல் நிலையத்தில் காசு கொடுத்து விவரம் வெளியே தெரியாமல் திடிரென்று ஒரு நாள் மதியம் அந்தம்மா மில்லீல் இருந்த வெளியே வரும் போது மப்டியில் இருந்த ஆந்திரா போலீஸ் அவரைப் தடுத்தது
அங்கே இருந்தவர்களுட்ன் ஆந்திரா போலிஸ்க்கும் கைகலப்பு ஆனது. பின்னர் அந்தம்மாவே நான் என் காரில் உடுமலைப்பேட்டை காவல் நிலையத்திற்கு வருகிறேன் என்றதும்தான் ஆந்திரா போலீஸ் அவரை விட்டது. இதற்குள் இந்த விசயம் நம்ம ஊரில் அனைத்து கோடிஸ்வரர்களுக்கும் பரவி அத்தனை பேரும் குட்டை போலீஸ் நிலையத்தில் குவிந்து விட்டனர். நம்ம ஊரில் உள்ள அத்தனை சொகுசு கார்களும் குட்டையில் அன்று பார்ததேன். சுமார் 30 கார்கள். எல்லா வகைகளும். குறைந்தப்பட்சம் sonata தான். Audi மட்டும் தென்படவில்லை. பின்னர் அந்தம்மா சொந்த ஜாமீனில் வெளிவந்தார். அத்தனை பெரிய கோடீஸ்வரர் வெறும் 4 லட்சத்துக்கு அதுவும் கவனக்குறைவால் இந்த சூழ்நிலைக்கு வந்ததுப்பற்றி மற்ற தொழில்அதிபர்களிடம் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரை நாம் மாவட்ட தலைநகரம் என்று அழைப்பதை விட குற்றத்தலைநகரம் என்று அழைப்பதே சரியாக இருக்கும். அந்த அளவுக்கு நாளுக்கு நாள் கொலை கொள்ளை வழிப்பறி என்று பேப்பரில் செய்தி வந்துக் கொண்டே இருக்கிறது. கோவையில் pricol நிறுவனத்தில் வேலை நீக்கம் செய்யப்பட்ட பத்து தொழிலாளிகள் அலுவலகத்தில் புகுந்து அங்கு இருந்த Senior HR managerai கொன்றுவிட்டார்கள். சமீபத்தில் திருப்பூர்க்கு அருகில் சூதாட்டம் நடந்த இடத்தில 49 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தார்கள் என்று பேப்பரில் படித்தேன். அருகில் இருந்த நண்பன் சொன்னான். "கணக்கு காட்டினதே 49 லட்சம்னா அப்ப அங்க எவ்வளவு இருந்திருக்கும்?"
தேங்காய்க்கு ஒன்றும் கட்டுபடியாகாத விலை, வறட்சியால் ஒன்றும்பெரிதாக இல்லாத விவசாயம் என்று பல காரணங்களால் இந்த தீபாவளி ஒன்றும் பெரிதாக கலகலக்கவில்லை. பார்ப்போம் இன்னும் சில நாட்கள் இருக்கிறது.
இன்னும் விசயம் இருக்கிறது. ஆனால் டைப் அடிப்பதற்கு பொறுமை இல்லை. சில நாட்களுக்கு பிறகு பொழுதுபோகாத நேரத்தில் மற்றதை டைப் செய்து இங்கே தருகிறேன்
1 comment:
இது என்னங்க பைக் விளையாட்டு? புதுசா இருக்கு.... வெட்டி வேலையா இதே பண்ணாம எப்பவோ ஒரு வாட்டி எஞ்சாய் பண்ணா ரைட்டு...
கோடிஸ்வரியம்மா நிலைம பரிதாபமாத்தான் இருக்கு... அப்பல்லாம் நம்பிக்கையான ஆளுக கூடவே இருந்து பாத்துக்கிட்டாங்க.... இப்பல்லாம் அப்பிடி ஆளுக இல்லைன்னு நினைக்கிறேன்... கஷ்டம்தான்...
தேங்காய் வியாபாரம் படுத்து படுத்து எந்திரிக்குது... ஹூம்ம்...
Post a Comment