Wednesday, March 17, 2010

ஊரும் சினிமாவும்

நான் கேள்விப்பட்ட வரையில் 'கிழக்கே போகும் ரயில்' தான் நம்ம ஊரில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம். அப்பறம் பொள்ளாச்சியில் எடுத்தது போக ஏதோ கொஞ்சம் நம்ம ஊரில் எடுப்பார்கள். முக்கியமாக திருமூர்த்தி மலையில் அல்லது அணையில்

சில வருடங்களுக்கு முன்பு வரை கோவை ஏரியா வின் Shooting hot spotஆக பொள்ளாச்சிக்கு அடுத்த படியாக கோபிசெட்டிபாளையத்தை பின்னுக்கு தள்ளி நம்ம ஊர் இருந்தது. (இப்போது பழைய படி கோபிசெட்டிபாளைத்தில் படப்பிடிப்புகள் நடைபெறுகின்றன). அதற்கு முக்கிய காரணம் சரத்குமார் மற்றும் பாலாப்போன சென்டிமென்டும் தான். ஏதோ ஒரு படத்திற்கு(படப்பெயர் மறந்துவிட்டது) சாலக்குடியில் பாடல் காட்சிக்கு போன சரத்குமார் & டீம் அங்கே மழை பெய்ததால் ஒரு நாலு நாள் மட்டும் உடுமலைப்பேட்டையில் பாடல் காட்சியை எடுக்கலாம் என்று வந்தார்கள். அப்போது தான் ஆனைமலைஸ் ஓட்டல் திறந்த நேரம்.(அதற்கு முன்பு வரை யார் வந்தாலும் பொள்ளாச்சியில் தான் தங்குவார்கள்). சரத்குமாருக்கு ஊரும் ஒட்டலும் ரொம்ப பிடித்து விட்டது. 20 நாட்கள் வரை அந்த படத்தின் படப்பிடிப்பு நீண்டது.

யார் செய்த புண்ணியமோ அந்த படம் வெற்றி பெற்றது. அப்பறம் என்ன அடுத்த சில வருடங்களில் சரத் நடித்த எந்த படமாக இருந்தாலும் அதில் ஒரு காட்சியாகவது உடுமலைப்பேட்டையில் எடுக்கப்படவேண்டும் என்ற நிலை வந்தது. அது போக காதலுக்கு மரியாதை சூர்யவம்சம் போன்ற வெற்றிப்பெற்ற படங்களும் நம்ம ஊரில் எடுக்கப்பட்டது. சென்டிமென்ட் ரொம்ப பார்க்கும் சினிமா துறையில் கேட்கவா வேணும். நிறைய படங்கள் அதற்குப்பிறகு இங்கு எடுத்தார்கள்.

ஆனைமலைஸ் நிர்வாகம் ஒட்டல் நடத்த சற்றே திணறிய போது சரத்குமார் நிறைய உதவி செய்தார். (பிற்பாடு அதை சொந்தமாக வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில்). அப்பவே 2 லட்சம் ரூபாய் செலவில் மேல்மாடியில் ஜிம் ஒன்றை ஏற்படுத்தினார். ஒரு குறிப்பிட்ட ரூம் சரத்குமார் தங்குவதற்காகவே ஒதுக்கப்பட்டது. மற்ற நாட்களில் யாருக்கும் அந்த ரூம் தர மாட்டார்கள். அவருக்கு நெருக்கமான ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் கூறினார். நக்மாவும் ஆனைமலைஸ் ஓட்டலும் ஒன்று. பிற்பாடு சொந்தமாக்கி கொள்ளலாம் என்று பணத்தை வாரி இறைத்தார். முடிந்தவரை கறந்துவிட்டு இரண்டும் டாட்டா காட்டி விட்டது என்றார்.(இந்த தகவல் தவறாகவும் இருக்கலாம்).

படப்பிடிப்பால் வாழ்ந்தவர்கள் நிறைய பேர். சில பேர் வீழ்ந்தவர்கள். முக்கியமாக லாட்ஜ்காரர்கள் காட்டில் மழைதான். வந்தால் மொத்த லாட்ஜ்யும் மாதகணக்கில் புக் செய்வார்கள். நல்ல வருமானம் தான். பின்னர் சமையல் பொருட்கள் கோழிகறி ஆட்டுக்கறி என்று நிறைய வாங்குவார்கள். உள்ளூர் பொருளாதாரம் களைகட்டும். ரஜினி நடித்த குசேலனுக்கு பாட்டு சீனில் நடித்தர்களுக்கு சேலை மற்றும் சாப்பாடு போட்டு 300 சம்பளம் மற்றும் அவர்களை மொத்தமாக கூட்டி வருபவர்களுக்கு தனியாக 100 என காசு விளையாடும். டாக்ஸி மற்றும் வேன்களுக்கும் கொண்டாட்டம் தான்.

அதே சமயம் பெரிய தொழிற்சாலைகள் நடத்திவரும் தொழில் அதிபர்களின் மகன்கள் சில பேர் ஊருக்கு எந்த நடிகைகள் வந்தாலும் லட்சங்களை வீசி அவர்களை வீழ்த்துவது வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில் இப்போது கோலம் போடும் நடிகைக்கு நல்ல பலன் என்று கேள்விப்பட்டேன். இந்த விசயங்கள் நாலு சுவற்றிக்குள்ளே நடந்தவை. எந்த அளவுக்கு உண்மையிருக்கும் என்று தெரியாது. கேள்விப்பட்டதை அப்படியே தருகிறேன்

சில காட்சிகள் இங்கே எடுத்தாலே படம் வெற்றி என்றால் படம் முழுவதும் இங்கே எடுத்தால் படம் ஆஸ்கார் விருதே வாங்கி விடும் என்று எண்ணி மூவேந்தர் என்ற படம் முக்கால்வாசி நம்ம ஊரிலேயே எடுத்தார்கள். படம் படுதோல்வி. அப்போது பிடித்தது சனி. அதற்கு பிறகும் இங்கே எடுத்த படங்கள் தோல்வி அடைந்ததால் கொஞ்ச கொஞ்சமாக படிப்பிடிப்பு குறைந்த கொண்டே வந்தது.

சமீபகாலமாக சென்டிமென்ட் உல்டாவாகிவிட்டது. உடுமலைப்பேட்டையில் படம் எடுத்தால் அவ்வளவுதான் என்ற நிலைக்கு வந்துவிட்டது. கடந்த பத்தாண்டுகளில் ரஜினி நடித்த படப்பிடிப்பு தமிழ்நாட்டுக்குள் (சென்னை தவிர) நடந்த ஓரே இடம் உடுமலைப்பேட்டை(படம் குசேலன்). பத்தாண்டுகளில் ரஜினி நடித்து ஓடாத ஓரே படம் குசேலன் தான். ரஜினிக்கும் மட்டுமல்ல விஜய்க்கும் தான் வில்லு வேட்டைகாரன் ஆகிய படங்களும் நம்ம ஊரில் எடுக்கபட்டு ஒடாத படங்கள். அது போக துரை மரியாதை கண்டேன் காதலை போன்ற பத்துக்கும் மேற்பட்ட படம் ஓடாதவை.

நம்ம ஊரைச் சேர்ந்த இளைஞர் சக்திவேல் இயக்கிய நகுல் நடித்த கந்தக்கோட்டை ஓரளவு ஒடியது (ஒரு வேளை நம்ம ஊரில் எடுக்காததால் இருக்குமோ).

அதாவது சென்டிமென்ட் பார்தது அவர்களாகவே வரிசை கட்டி வந்தார்கள். சென்டிமென்ட் பார்த்து அவர்களாகவே வராமல் இருக்கிறார்கள். அதற்கு நாமும் நம்ம ஊரும் எந்த விதத்தில் காரணமில்லை.

அரைமணி நேரத்தில் எழுதியது. பிழைகளும் குறைகளும் இருக்கும். மன்னிக்கவும்

6 comments:

Mahesh said...

அட அட அட... இப்பிடியும் செண்டிமெண்டுகளா?

ஆனா ஏகப்பட்ட டிஸ்க்ளெய்மர்களோட எழுதியிருக்கீங்களே :(

Appu said...

Very Good Post . When I saw Veetaikaran in hyd just jumped on the seat after seeing our places in song(Karikalan) and Shouted Enga Uru ENga Uru
But I saw on Ad (surya is played ) where place is udumalpet and The bus used in that also has name board as udumalapet .from Cinema to Advertisement :)

சிதம்பரம் said...

@ appu

நீங்க சொல்ற விளம்பரத்தை நான் பார்க்கவில்லை. என்ன விளம்பரம்னு சொல்லமுடியுங்களா?

@ mahesh

எனக்கு உறுதியா தெரியாததால்தான் அப்படி சொன்னேன். சும்மா பிளாக் இருக்குனு கதை விட கூடாது என்று நினைக்கிறேன்

Appu said...

Himani Navaratna Talc .The bus name also something like thangaraja

Sivasamy said...

//நம்ம ஊரைச் சேர்ந்த இளைஞர் சக்திவேல்//

யாருங்க இவரு...?

Sujatha Mohan said...

super anna.....
keep posting