Monday, March 22, 2010

உடுமலைச் செய்திகள்

மத்திய பேருந்து நிலையத்திற்கு கிழபுறம் இருக்கும் குடிசைளை சுத்தமாக அப்புறப்படுத்தி அந்த இடம் இரண்டு மாதமாக வெய்யிலில் காய்ந்து கொண்டிருக்கிறது. பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப் போகிறார்கள். (எனக்கு என்னவோ கல்பனா கிரவுண்டை பேருந்து நிலையமாக்கி விடலாம் என்றே தோன்றுகிறது. விளையாடுவதற்கு சிவசக்தி காலணியில் மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான 20ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில் கூட இதைவிட நல்ல மைதானத்தை ஏற்படுத்தி விடலாம். நாலாபக்கமும் சாலைகளை கொண்ட கல்பனா மைதானம் பேருந்து நிலையத்திற்கு நல்ல தேர்வு . உங்கள் கருத்து)

நான்கு வருடங்கள் ஆகும் என்றெ தோன்றுகிறது. நம்ம ஊருக்கு ரெயில் வர. வழக்கம் போல இந்த வருடமும் ரயில்வே பட்ஜெட்டில் நமக்கு அல்வா தான். திண்டுக்கல் முதல் பழனி வரை அகலப்பாதைக்கு நிதி ஒதுக்கியிருக்கிறார்கள். அதாவது அந்தப் பகுதி எல்லாம் திமுக காங் வசம் இருக்கிறது. நம்ம பகுதி எல்லாம் அதிமுக வசம் இருக்கிறது. இனி எதிர்க்கட்சி எம்பி கோரிக்கை வைத்து அதை ஆளும்கட்சி அமைச்சர் கேட்டு நிதி ஒதுக்கி..... விடுங்க அப்துல் கலாம் சொன்னதை செய்து கொண்டே இருப்போம். வேற வழி (கனவு காணுங்கள்!)

சுகுணா பவுல்டரி பற்றி வரும் செய்திகள் ஒன்றும் நல்லதாக இல்லை. நிறைய உற்பத்தி குறைப்பு செய்து இருக்கிறார்கள் என்றும் இந்த வார Junior விகடனின் சுகுணா நிறுவனம் ஏமாற்றி விட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டுவதாக கட்டுரை வந்துள்ளது. வரதராஜபுரம் மில்லில் தொழிலாளர்களுடன் பிரச்சனை என்றே எதிர்மறையான செய்திகளே வருகிறது. (யானைக்கும் அடி சறுக்கும்??)

அகலப்பாதைக்கு தான் பிரச்சனை என்றால் ரயில்வே மேம்பாலம் அதவிட கொடுமையாக இருக்கிறது. தண்டவாளம் இருக்கும் இடத்தில் ரயில்வே தான் பாலம் கட்டும் மற்ற இடத்தில் நெடுஞ்சாலை துறை கட்டும். ரயில்வே கட்டும் பகுதி ஒன்பது மீட்டர் உயரத்தில் இருக்கும் என்று கணக்கீட்டு நெடுஞ்சாலை துறை பாலம் கட்ட டெண்டர் விட்டு கிட்டதட்ட ஒரு வருடம் கழித்து வேலையை ஆரம்பிக்கும் நிலையில்...எப்பவுமே தூங்கி வழியும் ரயில்வே கிட்ட தட்ட தனது வேலையை முடித்துவிட்டது. ஆனால் ஒன்பது மீட்டர் உயரம் இருக்கும் என்று கணிக்கப்பட்ட பாலம் 10.5 மீட்டர் இருக்கிறது. இதனால் பாலத்தின் இருபுறமும் அளவுகள் மாறும். செலவுகள் ஏகிறும். இதனால் நெடுஞ்சாலை துறை மறுபடியும் அளந்து டெண்டர் விடுகிறார்கள். அப்பறம் வேலை ஆரம்பித்து...விடுங்க எப்படியாவது முடிச்சுடுவாங்க.....

ஏப்ரல் ஒன்றாம் தேதி தேர். இரண்டாம் தேதி Good Fridayக்காக விடுமுறை. அதனால் வியாழக்கிழமை மட்டும் லீவு போட்டால் சேர்ந்தால் போல் 4 நாள் விடுமுறை. அது போக நம்ம ஊர் தேரையும் பார்க்கலாம். முயற்சி செய்யுங்கள்

குறிப்பாக காரணம் சொல்ல முடியவில்லை என்றாலும் கடந்த 4, 5 வருடங்களாகவே திடீர் பணக்காரர்கள் நம்ம ஊரில் உருவாகிறார்கள். டிவிஎஸில் போய்கொண்டிருக்கும் ஆள் திடிரென்று பைக்கில் போவார். கொஞ்ச நாளில் சொந்த வீடு கொஞ்ச நாளில் நல்ல கார் திடீர் ஆடம்பரம். கேட்டால் தொழிலில் நல்ல காசு என்பார்கள். சுமார் 5 பேரை நானே கவனித்திருக்கிறேன். ஊரில் நிறைய பேரை சுட்டி காட்டுகிறார்கள். சரி கத்திரிக்காய் முத்தினா சந்தைக்கு வந்துதானே ஆகனும். அப்ப தெரிஞ்சுரும் விசயம்

மெகா மோசடி தொழில் அதிபர்கள் இப்போது தொழில் அதிபர்கள். ஆம் பணம் பாதாளம் வரை பாய்ந்தது. பிரச்சனை முடிந்தது.

நம்ம ஊர்காரர் கவுண்டமணிக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தது. இப்போது நலமாக இருக்கிறார்.(கவுண்டரே அடுத்த ரவுண்டு வாங்க காத்துட்டு இருக்கிறோம்)

இந்த கொங்கு முன்னேற்றப் பேரவை வந்ததும் வந்தது எங்கு பார்த்தாலும் கொங்கு கொங்கு என்று இருக்கிறது. கொங்கு எலக்ரானிக்ஸ் கொங்கு மெஸ் என்று நிறைய நிறுவணங்களின் பெயர் கொங்கில் இருக்கிறது. அது போக நிறைய வண்டிகளின் நம்பர் ப்ளேட்டுகளில் கொங்கு என்று sticker இருக்கிறது. (பேரு வச்சவங்க sticker ஒட்டுனவங்க கூட ஒட்டு போட்டுயிருந்தா Best ராமசாமி burst ராமசாமி ஆகியிருக்க மாட்டாரு). கொ.மு.கயின் செல்வாக்கு அதலபாதாளத்தில் சென்று கொண்டிருக்கிறது. கள் இறக்கும் பிரச்சனையில் மிரட்டலுக்கு பயந்து பின் வாங்கியதால் செல்வாக்கு சரிந்தது. அதே போல தேமுதிகவிலும் செல்வாக்கு சரிந்துள்ளது. இருந்தாலும் தேர்தல் சமயத்தில் காட்சிகள் மாறலாம். பார்ப்போம்

1 comment:

Sivasamy said...

//அது போக நம்ம ஊர் தேரையும் பார்க்கலாம்//

அது போக தங்களையும் சந்திக்க இயலுமா...?