Wednesday, July 15, 2009

உடுமலை ஒளிர்கிறது - 3 சிக்னல்களால்!!!

ஒரு கிராமத்துப் பழமொழி ஞாபகம் வருகிறது. "அறுக்கமாட்டான் இடுப்புக்கு 57 கத்தியாம்". அந்த மாதிரி சின்ன ஊருக்கு 3 இடங்களில் ஓரே நேரத்தில் சிக்னல்கள் வரப்போகிறது. புதிய பேருந்து நிலைய ரவுண்டனா, தளி ரோடு பொள்ளாச்சி-பழனி ரோடு சந்திப்பில் ஒன்று மற்றும் கன்னிகா பரமேஸ்வரி பள்ளிக்கு எதிரில் ஒன்று என மூன்று சிக்னல்கள் அமையப் போகிறது.

அதென்னமோ இந்த பொள்ளாச்சி பழனி ரோட்டில் தான் எல்லாம் அமைகிறது. ஊரைச் சுற்றி ஆயிரத்தெழு கிராமங்கள் நாலாபுறமும் இருந்தாலும் கொஞ்ச நாள் முன்பு வரை எல்லா பெட்ரோல் பங்க்களும் இந்த பொள்ளாச்சி பழனி ரோட்டில் தான் இருந்தன. ஊரில் எந்த பகுதியில் இருந்தாலும் இங்கு வந்து தான் பெட்ரோல் போட வேண்டும். இப்போது பரவாயில்லை. தளி ரோட்டில் அருகருகே 3 பங்க்குள் துவங்கியிருக்கிறார்கள்.


பத்து நாள் முன்பு இனி ஒரு வாரம் மழை பெய்யவில்லை என்றால் நம்ம ஊருக்கு தண்ணீர் பஞ்சம்(நம்ம ஊரு வரலாற்றில் முதன் முதலாக....) வந்துவிடும் நிலைக்கு வந்துவிட்டது திருமூர்த்தி அணை. யார் செய்த புண்ணியமோ (நான் இல்லீங்க...) சுமாராக மழை வந்து காப்பாற்றி விட்டது. ஆனாலும் இதயம் பலவீனமானவர்கள் யாரும் திருமூர்த்தி மலை பக்கமோ அணைப்பக்கமோ போகாதீங்க. காய்ந்து கிடக்கும் (சில நாட்களுக்கு முன் வரையான நிலைமை) அருவியையும் குளமாகிப் போன அணையையும் பார்க்க தைரியம் வேண்டும்.

கடந்த வார தினமலரில் நம்ம ஊரில் காவல் நிலையத்தில் யாரும் வழக்கே பதிவு செய்வதில்லையென்றும் அனைத்தையும் பேசியே பைசல் செய்யகிறார்கள் கட்டப்பஞ்சாய்த்து நடக்கிறது என்றும் செய்தி வந்தது. அடுத்த நாளே திருப்பூர் மாவட்ட(ஆமாங்க இப்ப நாமெல்லாம் திருப்பூர் மாவட்டம்) எஸ்பி சாந்தி அவர்கள் நேரில் வந்து லெப்ட் ரைட் வாங்கி விட்டார்கள். அரண்டு விட்டனர் நம்ம ஊர் போலிஸ்.

quick update: நான் இந்த பிளாக்ல எழுதன நேரமே என்னவோ திருமூர்த்தி மலை அருவியில் நல்ல வெள்ளம் வருகிறது. பாதுகாப்பு கருதி குளிக்க தடை செய்யப்பட்டுயிருக்கிறது.

2 comments:

SingaiAngel said...

udumalai olirkirathu signlakalal...intha blogspot olirkiraathu ungalal....eagarly waitin for new updats...keep goin!!

Mala, s'pore

சிதம்பரம் said...

நன்றி மாலா..வருகைக்கு