Wednesday, July 22, 2009

slice of life @ udumalpet

நீங்கள் உள்ளுர்லேயே பிறந்து வளர்ந்து கொஞ்சம் நட்பு வட்டாரங்களுடன் பழக்க வழக்கம் இருந்தால் உங்கள் நடமாட்டம்/நடவடிக்கை ஏதேனும் இரு கண்களால் கண்காணிக்கப்பட்டே தீரும். நம்ம ஊரில் நிறைய பேருக்கு தங்கள் வீட்டின் /கடையின் திண்னையில் உட்காந்து கொண்டே யார் வருகிறார்கள் போகிறார்கள் என்பதை பார்ப்பதே வேலையாக வைத்துக் கொண்டுயிருக்கிறார்கள். அது மட்டுமில்லாது அடுத்தமுறை அவர்களை சந்திக்கும்போது மறக்காமல் அதைப்பற்றியும் கேட்க தவறுவதில்லை. "சிதம்பரம் போன வாரம் சனிக்கிழமை சாயந்திரம் E.Bக்கு வடபுறம்(அது எங்கள் வீடு இருக்கும் ஏரியா) நீங்க பைக்ல போய்ட்டு இருந்தீங்க..நான் எதுக்கால வந்தேன் ஆனா நீங்க பாக்கல என்பதை போன்ற கேள்விகளை நான் நிறைய எதிர்கொண்டுயிருக்கிறேன். நீங்கள் வழக்கமாக உபயோகப்படுத்தும் வண்டியை விட்டு வேறு எதிலாவது நீங்கள் போனால் அதையும் மறக்காமல் இரண்டு வாரம் கழித்து கூட் உங்களை பார்ககும் போது கேட்க மறக்கமாட்டார்கள். இதில் நன்மையும் தீமையும் சேர்ந்தே இருக்கிறது.

எங்கள் அலுவலகத்திற்கு தேவையான மென்பொருளை கோவையில் இருக்கும் ஒரு நிறுவனம் செய்து வந்தது. அதுசம்பந்தமாக மேலும் விபரங்களை சேகரிக்க (Data collection) அந்நிறுவனத்தி்ல் வேலை பார்க்கும் நம்ம ஊரைப் சேர்ந்த என்னுடைய Batchmate பெண் நம்ம அலுவலகத்திற்கு வந்தார். அவரது சொந்த ஊரான குடிமங்கலத்துக்கு போக தன்னை பேருந்து நிலையத்திற்கு பைக்கில் கொண்டு வந்து விடுமாறு அவராக கேட்டுக்கொண்டதால் (நம்புங்கப்பா!!!) அவரைக் கொண்டுபோய் விட்டேன். விட்டுவிட்டு அலுவலகம் வருவதற்குள் 5 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் கல்லூரியில் வேலை செய்யும் நண்பனிடம் இருந்து போன். "நீ ஒரு பெண்ண கூட்டிட்டு பைக்ல போய்ட்டு இருக்கிறயமா?" என்று கேட்டான். செய்தி 5 நிமிடத்தில் 5 கிமி பறந்துள்ளது. என்னைத் தெரிந்த அவனுக்கு தெரிந்தவர்கள் யாரோ இந்த "பத்த வைச்சுட்டையே பரட்ட" ஸ்டைலில் பத்தவெச்சுட்டார்கள். அது போக ஒரு வாரத்தில் ஆறு ஏழு பேர் நேரடியாகவே கேட்டார்கள். மிகச்சாதாரண விசயத்துக்கு ஒவ்வொருவரிடமும் விளக்கம் சொல்ல சலிப்பாகவே இருந்தது. ரொம்ப நாளாக சேர்த்து வைத்த ஒரு Image கை கொடுத்தது. "அது நான் இல்லை. என்னைப் பற்றி உங்களுக்கு தெரியாதா" என்று திருப்பி கேட்டேன். பார்த்தவர்களுக்கே சந்தேகம் வந்து விட்டது. நமக்கு விளக்கம் சொல்லும் தொல்லை விட்டது.

அதே நேரத்தில் நன்மையும் இருக்கிறது. என் நண்பன் ஒருவன் காரில் விபத்தில் சிக்கிக்கொண்டான். விபத்து நடந்த இடத்தில் இருந்தவர் ஒருவர் ஹதாராபாத்தில் இருக்கும் என் நண்பனை அழைத்து, பெயர் தெரியவில்லை. ஆனால் 9852ல் (நம்ம கார் நம்பர். நண்பர்கள் வட்டத்தில் கொஞ்சம் பிரபலம்!) இவரைப் பார்த்திருக்கிறேன் என்று விபத்தைப் பற்றி கூறினான். திண்டுக்கல்லில் இருந்த என்னை அழைத்த அந்த நண்பன் விசயத்தை கூறினான். நான் வெளியூரில் இருந்ததால் வேறொரு நண்பனை அழைத்த சம்பவயிடத்திற்கு உடனே சென்று பார்க்குமாறு கூறினேன். குட்டைக்கு அருகில் விபத்து நடத்த இடத்திற்கு நண்பன் செல்லும் போது விபத்து நடத்து 5 நிமிடங்களே கடந்துயிருந்தது. இதுமட்டுமில்லாது விபத்தில் சிக்கிய நண்பனின் தந்தைக்கு தெரிந்தவர் தந்தைக்கு தகவல் சொல்ல அவரும் வந்துவிட்டார். The Power of Social Networking!??



சமீபத்தில் உடுமலைப்பேட்டையின் மேற்குப்பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒருவரை சந்தித்தேன். நல்ல படிப்பு நல்ல வசதி நல்ல நற்பண்புகள் ஆகியவற்றை கொண்டுள்ளவர். சுமாராக 33 வயது இருக்கும். பேச்சுவாக்கில் அவரது தினசரி நடவடிக்கைகள் பற்றி பேசினோம்.
காலை 7 மணி: தூக்கம் கலைதல்
8 மணி: குளித்து விட்டு காலை உணவு
9 மணி: UKG படிக்கும் மகளுக்கு டாட்டா சொல்லி ஸ்கூல் வேனில் ஏற்றுதல் (நீங்கள் நினைப்பதைப் போல இதெல்லாம் ஒரு வேலையானு கேட்டேன். உங்களுக்கு திருமணமாகி நீங்களும் பள்ளிக்கு அனுப்பும் போது தெரியும் என்று கூறி என் வாய்யை அடைத்துவிட்டார்.)
10 மணி: தினசரிகளை புரட்டி பார்ப்பது
11மணி: ஊருக்குள் இருக்கும் டீக்கடைக்கு சென்று ஒரு திருட்டு தம் மற்றும் டீ
1 மணி: மதியம் சாப்பாடு
2 மணி: குட்டி தூக்கம்
4 மணி: அருகில் இருக்கும் அவரது தோப்புக்கு சென்று மேற்பார்வை
5.30 மணி : வீடு திரும்புதல்
அப்பறம் பள்ளியில் இருந்து திரும்பிய மகளோடு விளையாட்டு, படிப்பு பின்பு கொஞ்சம் டீவி இரவு பத்து மணிக்கு தூக்கம்.... வாரம் ஒரு தடவை டவுனுக்கு வந்து ஒரு சினிமா. அவ்வளவுதான்.

இதற்கும் கோவை PSGல் MBA படித்தவர். சுமாராக மாதம் 2 லட்சம் வருமானம் (செலவு
என் கணிப்பப்படி 30ஆயிரம் இருக்கும் + வருமான வரியென்றால் என்ன என்று கேட்கும் நிலையில் இருக்கிறார். அத்தனையும் tax free). எனக்கு ஆச்சிரியமாக உள்ளது. உங்களுக்கு பொறாமையாக இருக்கிறதா?


ஏர்டெல் postpaid வைத்திருக்கும் நான் சமீபத்தில் அலுவலக உபயோகத்திற்க்காக இன்னொரு இணைப்பு பெற அந்நிறுவனத்தின் ஷோருமிற்க்கு சென்றேன். கூடுதல் இணைப்பைப்(Addon) பற்றி கேட்டதற்கு தற்போது உடுமலைப்பேட்டைக்கு (மற்றும் நமது ஊரைப்போன்ற பல சிறுநகரங்களுக்கும்) Postpaid இணைப்பு வழங்கப்படுவதில்லை என்றும் வேண்டுமென்றால் ப்ரிபெய்டு வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டனர். காரணம் யாரும் சரியாக பில் கட்டுவதில்லை என்றும் கூறினார். அதன்படி பார்த்தால் சென்னை கோவை போன்ற நகரங்களில் எல்லாம் ஒழுங்காக பில் கட்டுராங்களா? ஒப்பிட்டு பார்த்தால் பெருநகரங்களைவிட நம்ம ஊர்காரங்க சரியாகத்தான் பில் கட்டுகிறார்கள். ஆனால் இந்த தனியார் நிறுவனங்களுக்கு நம்மைப் போன்ற சிறுநகரங்களை எப்போதும்மே ஒருமாதிரி வேண்டாவெறுப்பாகத்தான் பார்க்கிறார்கள். Credit card Personal Loan போன்றவற்றை எப்போதும் நம்ம ஊர்களுக்கு தருவதே இல்லை... என்ன கொடுமைசார் இது?

3 comments:

Unknown said...

Anna..neenga mention paniyirukum nanbar enna vela pakkurirarnu konjam kettu sollunga......

சிதம்பரம் said...

@ sumathi

ஹா ஹா..வேலைக்கு போனால் இப்படி சுகமாக இருக்க முடியுமா...அவர் 30ஏக்கர் தென்னந்தோப்புக்கு சொந்தகாரர்.அவ்வளவுதான்

Unknown said...

enaku therincha namma udumalai nanbar oruvar chennail idhai vida jolly aaha irukirar, mammu sowkiyama